சனி, 9 ஏப்ரல், 2011
4.கல்லூரி(கள் ஊறி) காலம்.. Kick is always there rite :-)
அன்புள்ள நண்பர்களுக்கு,, ஒரு வழியா வார கடைசி வந்துடுச்சி..என்னா வெய்யில்லு..மூளை உருகி மூக்கு வழியா வந்துடும் போலிருக்கு..ஆபீஸ்ல உட்க்கார்ந்து நம்ம கதைய எழுத முடியல....இத எழுதுறப்ப நம்ம காலேஜ் டைம்கே போன மாதிரி பீலிங்..பாதியில நிறுத்தவும் முடியாது தொடரவும் முடியாது..அதான் வார கடைசியில அனத்தி தள்ளிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்...படிக்கறவங்களும் சீரியஸா எடுத்துக்க மாட்டீங்க... அந்த ரயில்வே ஸ்டேஷன் க்ரூப்ல ரெகுலரா வரது பாரதியும், ஷங்கரும்.. நிவாஸ் அப்பப்ப வருவான்.. என்கிட்ட எப்பவும் பேச்சை ஆரம்பிக்கறது ஷங்கராதான் இருப்பான்..நா கூட என்கிட்ட பேசத்தான் அந்த பக்கமா பாசத்தோட வரானுங்க பய புள்ளைங்கன்ட்டு ரொம்ப நாள் நெனச்சிட்டு இருந்தேன்..அப்புறம்தான் தெரிஞ்சிது மொத ரவுண்டு முடிச்சிட்டு 2nd ரவுண்டு சாப்பிட வராங்கன்ட்டு..அங்கதாங்க அந்த விஷயதுலதாங்க எங்க நட்பு ஆரம்பிச்சிது....இவங்க 3 பேருக்கும் எனக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை இருக்கு.. அது என்னன்னா பேச்சு.. ஒருத்தவனுக்கு ஒருத்தவன் சளைச்சவன் இல்லைங்க..நா ஆரம்பத்துல யாருகிட்டயும் அதிகம் பேச மாட்டேன்.. எல்லாரையும் பார்த்து ஈனு ஒரு இளிப்பு இளிக்கரதோட சரி.. அதுக்கப்புறம் நாங்க மதியம் ஒன்னா திரிய ஆரம்பிச்சோம்.. நம்ம காலேஜ் பக்கத்துல நாங்க சாப்பிடாத மெஸ்சே இல்ல..ஒவ்வொருதவனும் அவன் அவன் பெருமைய.. பள்ளியில, காலேஜ்ல படிச்ச அழக மாத்தி மாத்தி பேசிப்போம்..எங்களுக்குள்ள நல்ல புரிதலும் நட்பும் ஏற்பட ஒரு தொடக்கம் அந்த மதிய நேரம்தான்..ஆனா நெருங்கிய நண்பர்கள் ஆனது கார்த்தி வீட்டுலதான் :-) அப்படியே மெஸ் தேடும் படலத்துல நாங்க ரயில்வே ஸ்டேஷன் விட்டு வெளிய வர ஆரம்பிச்சோம்.. அங்கதான் எங்களுக்கு தினேஷ்,மலையமான்,மணவாளன்,சதாத்,யோகேஷ் கிட்ட நெருங்க வைப்பு கெடைச்சுது..இதுல sometime malai,thenesukum yeppavum மணவாளனுக்கு என்னை சீண்டி பாக்கறதுல எப்பவும் ரொம்ப குஷி. காலேஜ்ல எனக்கு பின்னாடி பென்ச்ல ஒக்காந்திருப்பான்..இடுப்புல குத்தி என்ன ஒரு அடி குதிக்க விடறதுல அவனுக்கு ரொம்ப ஆனந்தம் :-) இப்படியே போயிட்டு இருந்தப்ப ஒரு மறக்க முடியாத..இன்னைக்கு நெனச்சு பார்த்தா கூட சிரிக்கற மாதிரியான சம்பவம் நடந்துது..அன்னைக்கு ஐடி கார்டுக்கு போட்டோ எடுக்கராங்கண்டு ஒரு தகவல் காத்து வாக்குல காதுக்கு வந்துது..எல்லாரும் நம்ம ஹாஸ்டல், அக்கம் பக்கம்னு போயி இயற்கையா இருக்கற எங்க அழகுக்கு இன்னும் கொஞ்சம் அழகு கூட்டிட்டு வந்து ஆர்வமா ஒக்காந்திருந்தோம்..அந்த நேரமும் வந்துது பக்கத்துல இருந்தவன் தல மேல கால வச்சி பின்னங்கால் பிடரில பட ஓடுனோம்..கேமராவ மூக்கு நேரா வச்சி..வடைய பாக்கற காக்கா மாதிரி ஒரு பார்வை பார்த்தாரு நம்ம போடோக்ராபர்..வித விதமா நிக்க வச்சி இரண்டு மூணு போட்டோ எடுத்தாரு..நாங்களும் பெருமையா போஸ் கொடுத்தோம் ..ஒரு வாரம் கழிச்சி எங்க அழகு திருமுகத்தோட அந்த ஐடி கார்டு வாங்க அதே வேகத்தோட ஆபீஸ் போனோம்..கூட்டம் அதிகமா இருந்ததால எங்களையே பார்த்து எடுத்துக்க சொன்னாங்க..தேடி தேடி பாக்கறோம் கடைசி வரைக்கும் கெடைக்கல..வாடி போன முகத்தோட..ஏமாற்றத்தோட திரும்பறோம்.. அப்பத்தான் பரமேஸ்வரி பிரவீனா பேயறஞ்ச முகத்தோட நம்ம ஐடி கார்டு இதுலதான் இருக்குன்ட்டு சொன்னாங்க..எங்க அறிவை போல பார்வையும் கொஞ்சம் கூர்மையாக்கிட்டு தேடுனோம்..பேர வச்சி எப்படியோ கண்டுபுடிசோம்..என் போட்டோவ பார்த்தோன என்னாலேயே சிரிப்பா தாங்க முடியல..சரி நம்ம கதைதான் இப்படின்ட்டு நெனச்சி திரும்பி பார்த்தேன்..நம்ம பய புள்ளைங்க மண்ணுல விழுந்து பொரண்டு சிரிச்சிகிட்டு இருக்கானுங்க..அதுலயும குறிப்பா பாரதி,சிவாவோட போட்டோ ரொம்ப பிரமாதமா இருந்துது..யாருகிட்டலாம் அந்த ஐடி கார்டு ஒரிஜினல் இருக்கோ அவங்க எல்லாம் எடுத்து பாருங்க நா சொல்றது உண்மையா போய்யன்ட்டு தெரியும்..ஹாலிவுட் என்னங்க ஹாலிவுட்..இப்படி ஒரு வித்தியாசமான விலங்குகள வச்சி இவ்ளோ லோ பட்ஜெட்ல ஒரு காமெடி படம் எடுத்தாரே அந்த போட்டோக்ராபரதாங்க நாங்க இன்னும் தேடிட்டு இருக்கோம்.. இதுல நம்ம நிவாஸ் பய மட்டும் ஆளை காணும்..2 நாள் அப்புறtம்தான் போட்டோவ காட்டுனான் அவன் போட்டோ மட்டும் நார்மல்..பய சத்தம் போடாம தீபக் செராக்ஸ்(ராம்ஸ் இல்லைங்க..) போயி வேற போட்டோ வச்சி செராக்ஸ் எடுத்துட்டு வந்துட்டான்..நாங்களும் படை எடுத்தோம்..காரியத்த சத்தம் போடாம முடிச்சோம்..ஆனா பாவம் எங்க போட்டோவ செராக்ஸ் எடுத்த புனித காரியத்த செஞ்ச பொண்ணுங்க வேலைய விட்டு போயிட்டாங்க..இப்ப காசி பக்கம் ராமேஸ்வரம் பக்கம் ...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக