சனி, 9 ஏப்ரல், 2011

கல்லூரி(கள் ஊறி) காலம்.. Kick is always there rite :-)

அன்புள்ள நண்பர்களுக்கு... இரண்டு நாள் இடைவேளை.. சரி புதுசா எதாச்சும் கலவரத்த உண்டு பண்ணனுமே அப்பத்தான் இந்த வாரம் கொஞ்சம் கல கலப்பா ஓடும்.. என்ன எழுதறது.. ' கவிதை.. நமக்கு வராது ஏன் அதை வம்புக்கு இழுக்கணும்... கதை.. கேட்கத்தான் தெரியும் சொல்ல தெரியாது.. பொது அறிவு .. பொதுவாவே அறிவு இல்லை இதுல பொது அறிவு வேறவா.. :-( சரி என்ன பன்னலாம்.. வேற வழி இல்ல வழக்கம் போல வெட்டியா எதாச்சும் பேச வேண்டியதுதான்.. சரி அப்படியே நம்ப கல்லூரி வாழ்க்கைல நடந்த ஏன் நினைவில இருக்கற சின்ன சின்ன விஷயங்கல பகிர்ந்த்துக்க்கலாம்னு நெனைக்கறேன்.. B . SC முடிச்சிட்டேன் எப்படியோ தட்டு தடுமாறி .. வாழ்க்கைல ஒரு இலக்கு தெளிவா இல்லாத வயசு(இப்ப வரைக்கும் இல்லையோ) அது.. அடுத்து என்ன பண்ணலாம்.. ஒரு தொழில் பண்ணலாம்னு ஆசை.. கணினி அறிவியல் படிச்சா திமிர்..browsing centre வைக்கலாம்னு ஆசை.. நல்ல நேரம் பண்ணல..நண்பர் கார்த்தி அண்ணாமலை பல்கலைகழகம்..நம்ம அன்போடு வரவேற்கும்.. M .C . A படிச்சி பெரிய கணினி பொறியாளரா ஆகலாம்னு ஒரு கனவை எற்படுத்துனான்(கடைசி வரைக்கும் கனவாவே போயிடுமோ) . நண்பன் எவ்வழி நானும் அவ்வழி..சேர்ந்துட்டேன் நம்ப கல்லூரி வளாகத்துல வலது காலை எடுத்து வச்சிட்டேன்.. முதல் நாள் நம்ப ஆபீஸ் பக்கம் ஏன் நடமாட்டம் அதிகமா இருந்தது(நம்ப என்னைக்கு வகுப்பு பக்கம் எட்டி பார்த்தோம்..)..எவ்வளவு பொண்ணுங்க..ஆனா அப்பா கூட வந்திருந்ததால உத்தம புத்திரனா குனிஞ்ச தலை நிமிரல... நம்புங்க மக்களே கடைசி வரைக்கும் அப்படியே இருந்திட்டேன்.. சரி சேர்ந்தாச்சு முதல் நாள் வகுப்பு..கார்த்திக்கு பள்ளி ஷங்கர் பாரதி அறிமுகம் ஏற்கனவே இருந்ததால சகஜ நிலைல இருந்தான்.. முதல்ல எனக்கு ஷங்கர் அறிமுகமானான்.. ஷங்கர் என்கிட்ட கேட்ட முதல் கேள்வி எவ்வளவு மதிப்பெண் என்ன ப்ராஜெக்ட் என்ன டெக்னாலஜி.. நெனச்சு பாருங்க..எவ்வளவு வருத்த பட்டிருப்பேன்.. யார பார்த்து என்ன கேள்வி...சரி இவன்கிட்ட 2 அடி தள்ளி நிக்கணும் படிக்கற புள்ளையா இருக்குண்டு நெனச்சேன்..வகுப்பறையும் பார்த்தாச்சு..எட்டி பாத்தேன் வகுப்ப..பொண்ணுங்க மட்டும்தான் இருந்தாங்க..உள்ளார போலாமா வேணாமா..ஒரு தயக்கம்.. எங்கட இந்த பயலுவ இன்னும் வரலன்ட்டு பார்த்தா வழக்கம் போல வெளிய சின்ன சின்ன குழுவா நின்னு அறிமுக படலம் நடக்குது .. எங்கடா இந்த கார்த்தின்னு தேடி பாக்கறேன்.. ஷங்கர் பாரதி அமுது கூட நின்னு காதுல இரத்தம் வர அளவுக்கு பேச்சு வார்த்தை நடக்குது..என்னால உடனே சேர முடியல.. ஒரு தயக்கதுல தூரத்துல இருந்து பார்த்துட்டு இருந்தேன். தூரத்துல ஒரு உருவம்..மெல்ல மெல்ல என்ன மாதிரியே தயங்கி தயங்கி எட்டி பாக்குது.. ஆஹா நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டாண்டா.. யாரு அதுன்னு.... அடுத்த போஸ்ட்ல பார்ப்போம்.... :-) @ALL - நீங்களும் உங்களோட சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துக்கலாமே..ஒரு சின்ன travel நம்ப காலேஜ் lifekku .. I may be boring..If it is, sorry for that..All of you have a big role in it.. I thought of writing it in English..but on later part i felt i can express myself better in Tamil only..(English theriyathunga athaan unmai :-) ).. Expecting all ur reflections of this..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக